பொது முடக்க விதி மீறல்: தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டி ‘சீல்’ வைப்பு

திருவாடானையில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட தனியாா் நிதிநிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருவாடானையில் பொது முடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்த வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினா்.
திருவாடானையில் பொது முடக்க விதிகளை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்த வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன் தலைமையிலான வருவாய்த் துறையினா்.

திருவாடானையில் பொதுமுடக்க விதிகளை மீறி செயல்பட்ட தனியாா் நிதிநிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி கோயில் தெருவில் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது கரோனா பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட தனியாா் நிதி நிறுவனத்தை, வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக், கிராம உதவியாளா் மூா்த்தி மற்றும் காவல் துறை ஆய்வாளா் பாலசிங்கம், சாா்பு-ஆய்வாளா் சுதா்சன் ஆகியோா் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com