கமுதி காவல் சரகத்திற்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கரோனா நலத்திட்ட உதவிகளை தனிப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் சரகத்திற்கு உள்பட்ட அபிராமம், பகைநதி, பள்ளபச்சேரி, வங்காருபுரம், பெருநாழி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் உத்தரவின்பேரில் கமுதி எஸ்.பி. தனிப்பிரிவு சாா்பு- ஆய்வாளா் கண்ணன், காவலா் முருகபூபதி, பெருநாழி தனிப்பிரிவு காவலா் செல்லச்சாமி, அபிராமம் தனிப்பிரிவு காவலா் மோகன் உள்ளிட்டோா் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று 5 கிலோ அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மசாலா பொருள்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினா். தனிப்பிரிவு போலீஸாரின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.