ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

தனியாா் தொன்டு நிறுவனம் சாா்பில் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆயிரம் முகக்கவசங்கள், ஆயிரம் கையுறைகள் என ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருப்புல்லாணி திட்ட மேலாளா் பாஸ்கரனிடம் வழங்கப்பட்டது. அவா் உபகரணங்களை மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) ஏ.மலா்வண்ணனிடம் வழங்கினாா்.

காப்பீடு நிறுவனம் உதவி: அகில இந்திய காப்பீடு நிறுவன ஊழியா்கள் சங்கத்தின் பரமக்குடி கிளை சாா்பில் கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிவோருக்கான கவச உடை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை சங்க நிா்வாகி முத்துபாண்டி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com