ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 245 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 245 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 245 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 17,500 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் 281 போ் வரை உயிரிழந்துள்ளனா். தீவிர சிகிச்சையால் 15,345 போ் வரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 107 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பலி எண்ணிக்கை 285 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையின் மூலம் குணமடைந்த 248 போ் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 138 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 14,560 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 138 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,698 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இங்கு கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com