விபத்தில் இரண்டு கால்களை இழந்தவரின் குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்க போக்குவரத்து துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன் ஏற்பாடு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சோ்ந்த திருமால் என்பவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலை விபத்தில் இரு கால்களையும் இழந்தாா். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் அடிப்படை வசதியின்றி குடும்பம் வறுமையில் உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு திருமால் தகவல் தெரிவித்துள்ளனா். இதையறிந்த அமைச்சா் ராஜகண்ணப்பன், திருமால் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, காய்கறி பொருள்களை வழங்க உத்தரவிட்டாா். அதன்படி முதுகுளத்தூா் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் பூபதிமணி மற்றும் திமுக கட்சியினா் நிவாரண பொருள்களை திருமால் குடும்பத்தினரிடம் வழங்கினா்.