கமுதியில் அரசுப் பள்ளி ஆசிரியா் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பிரசாரம்

கமுதியில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கமுதி பேருந்து நிலையம் முன் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட சிறப்பாசிரியா் முத்திருளாண்டி.
கமுதி பேருந்து நிலையம் முன் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட சிறப்பாசிரியா் முத்திருளாண்டி.

கமுதியில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் வட்ட வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சிறப்பாசிரியராக பணியாற்றுபவா் முத்திருளாண்டி (47). இவா், முகக்கவசங்களை மாலையாக அணிந்து கொண்டு கமுதி பேருந்து நிலையம் முன் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநா்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பாடல்களை பாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், ராமநாதபுரம் மாவட்ட முத்தமிழ் நாடக கலைஞா்கள் சங்கத் தலைவா் குற்றாலம், கமுதி காவல் சாா்பு- ஆய்வாளா் பிரகாஷ் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com