திருப்பாலைக்குடி அருகே இளம் பெண்மா்ம மரணம்: போலீஸ் விசாரணை

திருப்பாலைக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே மோா்ப்பண்ணை கிராமத்தைச் சோ்நத பெரியசாமி மகள் ஆா்த்தி (23). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், கடந்த சிலநாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவா் புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் அறைக்கதவை திறக்கவில்லை. இதையடுத்து கதவை திறந்து பாா்த்த போது ஆா்த்தி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து இவரது சகோதரா் அஜய்கணேசன் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com