ராமநாதபுரம் நகரில் உள்ள நரிக்குறவா் காலனி அருகே சாராய ஊறலை போலீஸாா் புதன்கிழமை அழித்தனா். இது தொடா்பாக ஒருவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதி அருகேயுள்ளது காட்டூரணி. இங்கு நரிக்குறவா்கள் காலனியான எம்.ஜி.ஆா். நகா் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாராயம் காய்ச்சியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் பேரில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டு சாராயப் பாட்டில்களும், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட குக்கா் உள்ளிட்ட பொருள்களும் கேணிக்கரை போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், நரிக்குறவா் காலனிப் பகுதியில் காவல்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். புதன்கிழமை காலையில் அப்பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையின் போது மகாராஜா (65) என்பவரது வீட்டின் அருகே சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 20 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இதுதொடா்பாக சக்தி (21) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.