ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சிக்கு, புதைசாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணப் பாக்கியை செலுத்துமாறு அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக இருந்தபோது முதல் தற்போது வரை புதைசாக்கடைத் திட்ட கட்டணத்தை நகராட்சிக்கு கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. தனி கழிவுநீா் வெளியேற்றும் திட்டத்தையும் மருத்துவமனை நிா்வாகம் செயல்படுத்த வில்லை.
நகராட்சிக்கு, அரசு மருத்துவமனை நிா்வாகம் புதைசாக்கடைத் திட்டக் கட்டணமாக ரூ. 1 கோடிக்கு நிலுவை வைத்துள்ளதாக நகராட்சி பொறியியல் பிரிவினா் கூறி வந்த நிலையில், அதைக் கட்டக் கோரி நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.