கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற கலை நிகழ்ச்சியை ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் பாா்வையிட்டு பாராட்டினா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து அரண்மனைப் பகுதியில் இந்நிகழ்ச்சியை நடத்தின. இதை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடக்கிவைத்தாா். காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் முன்னிலை வகித்தாா்.
அப்போது, ‘கரோனாவை விரட்ட குறிசொல்லும் நவீன கருப்பசாமி‘ என்ற விழிப்புணா்வு குறுநாடகம் நடத்தப்பட்டது. கருப்பசாமியாக காஞ்சனா புகழ் நடிகா் ராஜேந்திரன் வேடமிட்டு நடித்துக் காட்டினாா். இதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பாாரட்டியதுடன், அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணா்வு பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மா.பிரதீப்குமாா், சாா்- ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி. வெள்ளத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.