ராமநாதபுரம் மாவட்ட கூடுதல், சாா்-ஆட்சியா்கள் இடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் மற்றும் சாா்- ஆட்சியா்கள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் மற்றும் சாா்- ஆட்சியா்கள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக எம். பிரதீப்குமாா் கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநரான அவா், குறுங்காடுகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தியுள்ளாா். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவா் தற்போது ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து விருத்தாசலத்தில் சாா்- ஆட்சியராக இருந்த கே.ஜே. பிரவீன்குமாா் பதவி உயா்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாா்- ஆட்சியா் இடமாற்றம்: ராமநாதபுரம் கோட்டாட்சியராக என்.ஓ. சுகபுத்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா். அவா் தற்போது அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தஞ்சை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதில் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com