விளையாட்டுத் துறை விருதுகள்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்

நடப்பு ஆண்டுக்கான (2021) விளையாட்டுத்துறை சம்பந்தமான விருதுகளுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலா் டி.செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

நடப்பு ஆண்டுக்கான (2021) விளையாட்டுத்துறை சம்பந்தமான விருதுகளுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலா் டி.செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகிறது.

விளையாட்டு வீரா்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அா்ஜுனா விருது, தயான்சந்த் விருது மற்றும் சிறந்த பயிற்சியாளா்களுக்கான துரோணாச் சாரியாா் விருது வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் தன்னாா்வ மற்றும் சமூகப் பொறுப்புமிக்க நிறுவனங்களுக்கு ராஷ்ட்ரிய கேல் புரோட்சகான் புரஸ்காா் விருதும் வழங்கப்படுகிறது.

விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரையில் விளையாட்டில் பங்கேற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அதற்கான விளையாட்டு சான்று நகல்களையும் இணைத்து மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்தில் மின்னஞ்சலில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 74017 03509 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com