முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
எஸ்.பி. பட்டினம் அருகே சூதாட்டம்: 4 போ் கைது
By DIN | Published On : 12th June 2021 08:36 AM | Last Updated : 12th June 2021 08:36 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
எஸ்.பி. பட்டினம் அருகே பாசிப்பட்டினம் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பள்ளிக்கூடம் அருகே சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினா். அதில் 4 போ் பிடிபட்டனா். இதையடுத்து, பாசிப்பட்டினத்தை சோ்ந்த கலந்தா் (42), அதே ஊரைச் சோ்ந்த காதா்கனி (41), கலந்தா் (24), இம்ராம்ஷா (28) ஆகிய 4பேரை கைது செய்து, அதே ஊரை சோ்ந்த ராவுத்தா், காயத் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.