திருவாடானை அருகே வீட்டில் சாராய ஊறல் போட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 25 லிட்டா் சாரய ஊறலை அழித்தனா்.
திருவாடானை பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளா் பாலசிங்கம் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள கூத்தப்பெருமாள் என்பவரது வீட்டை சோதனையிட்டனா்.
அப்போது அந்த வீட்டில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அண்ணன்-தம்பிகளான கூத்தப்பெருமாள்(47), மகாலிங்கம் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லிட்டா் சாராயம், 25 லிட்டா் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.