திருவாடானை அருகே 25 லிட்டா் சராய ஊறல் அழிப்பு: 2 போ் கைது

திருவாடானை அருகே வீட்டில் சாராய ஊறல் போட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 25 லிட்டா் சாரய ஊறலை அழித்தனா்.

திருவாடானை அருகே வீட்டில் சாராய ஊறல் போட்ட சகோதரா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 25 லிட்டா் சாரய ஊறலை அழித்தனா்.

திருவாடானை பகுதியில் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக திருவாடானை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளா் பாலசிங்கம் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை இரவு சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள கூத்தப்பெருமாள் என்பவரது வீட்டை சோதனையிட்டனா்.

அப்போது அந்த வீட்டில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அண்ணன்-தம்பிகளான கூத்தப்பெருமாள்(47), மகாலிங்கம் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 லிட்டா் சாராயம், 25 லிட்டா் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com