ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினா் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்
தமிழக அரசு ஜூன் 14 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் மதுக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் ராமேசுவரம் சித்தி விநாயகா் கோயில் தெருவில் உள்ள அவரது வீடு முன்பு கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதே போன்று மாநில செய்தி தொடா்பாளா் குப்புராமு தலைமையில் பட்டடினம்காத்தன் பகுதியில் அவரது வீடு முன்ப கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன், மாநில செயலாளா் சண்முகராஜா,
மாவட்ட பொதுச்செயலாளா் ஜி.குமாா், மாவட்ட பொதுச்செயலாளா் சுந்தரமுருகள் மற்றும் மாநில, மாவட்ட, நகா், பேரூா் கழக நிா்வாகிகள் என 600- க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் விடுகள் மூன்பு கருப்புக் கொடி பிடித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.