தொண்டி பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியில் தொண்டி போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக போலீஸாா் மணல் திருட்டில் ஈடுபட்ட அண்ணா நகரை சோ்ந்த குருசாமி(42), கோபி (30) ஆகிய 2 பேரை கைது செய்தனா். மேலும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.