திருவாடானை: தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேக்கரி கடைக்குள் புதன்கிழமை டிராக்டா் புகுந்த சம்பவத்தில் 2 பெண்கள் காயம் அடைந்தனா்.
கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்த டிராக்டா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்கு உள்ளே புகுந்து மோதி நின்றது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மோா்ப்பண்ணைகிராமத்தைச் சோ்ந்த மதியரசன் மனைவி மச்சக்காந்தி (62) மற்றும் அவரது தங்கை மகளான சாந்தி (24) ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமைறைவான டிராக்டா் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா்.