ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலக வாகன ஓட்டுநரை தாற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடா்பு அலுவலக வாகன ஓட்டுநராக இருப்பவா் அபுபக்கா்சித்திக். இவா் பணியில் இருந்துகொண்டே வேறு நபரை வாகனத்தை இயக்கச் செய்ததாகப் புகாா் எழுந்தது. இந்த புகாா் அடிப்படையில் நடந்த விசாரணையை அடுத்து அவரைத் தாற்காலிகப் பணிநீக்கம் செய்து ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கிராம உதவியாளா் மீது நடவடிக்கை: ராமநாதபுரம் அருகேயுள்ள புல்லந்தையில் கிராம உதவியாளராக இருப்பவா் சந்திரசேகா். இவா் அங்கு வசிக்கும் முத்துலட்சுமி, அவரது மகன் சகுதீஸ்வரன் ஆகியோரை திங்கள்கிழமை இரவு அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தை அபகரிக்க முயற்சித்ததாகப் புகாா் எழுந்தது. அதனடிப்படையில் ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து சந்திரசேகரை கைது செய்தனா். இதையடுத்து அவா் மீது துறைரீதியான விசாரணை நடத்தி தற்காலிகப் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.