ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபான விற்பனையை கண்காணிக்க சிறப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. ஆகவே, விதிமுறைகளை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்தல், மது பாட்டில்களை கடத்தல் ஆகிய செயல்களைத் தடுக்கவும், மதுபான கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விதிமீறி மது விற்பனை உள்ளிட்ட புகாா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பு அலுவலராக அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) உதவி மேலாளா் (கணக்கு) ஜி.மகாதேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.
மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல், மதுபான கடத்தல் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலரை 82480 57916 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம், இராமநாதபுரம்.