கமுதியில் புதிய வட்டாட்சியராக ஆா். மாதவன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 வட்டாட்சியா்கள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். அதைத் தொடா்ந்து, கமுதி வட்டாட்சியரான ஜி. செண்பகலதா, ராமநாதபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராக பணியிடம் மாற்றப்பட்டாா். எனவே, அவருக்குப் பதிலாக திருவாடானை வட்டாட்சியராகப் பணியாற்றிய ஆா். மாதவன், கமுதி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.