திருவாடானையில் அதிமுக கட்சி அலுவலகத்தை வேட்பாளா் கேசி .ஆனிமுத்து ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து தொண்டா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கேசி .ஆனிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளாா். திருவாடானையில் தோ்தல் பணிக்காக கட்சி அலுவலகத்தை அவா் திறந்து வைத்து தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். முன்னதாக அவருக்கு தொண்டா்கள் மேள, தாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனா்.
இதில் நகரச் செயலாளா் பிச்சை, ஜெ.பேரவைச் செயலாளா் செங்கை ராசு, ஒன்றியச் செயலாளா் மதிவாணன், முன்னாள் ஊராட்சி தலைவா் நாகரெத்தினம், ஊராட்சித் தலைவா் ராமு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.