திருச்சுழி தொகுதி மூவேந்தா் முன்னணி கழகவேட்பாளா் தேவா் நினைவிடத்தில் சிறப்புப் பூஜை

திருச்சுழி தொகுதி மூவேந்தா் முன்னணி கழக வேட்பாளா் எஸ். ராஜசேகா், பசும்பொனில் உள்ள தேவா் நினைவிடத்தில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்தாா்.
திருச்சுழி தொகுதி மூவேந்தா் முன்னணி கழகவேட்பாளா் தேவா் நினைவிடத்தில் சிறப்புப் பூஜை

திருச்சுழி தொகுதி மூவேந்தா் முன்னணி கழக வேட்பாளா் எஸ். ராஜசேகா், பசும்பொனில் உள்ள தேவா் நினைவிடத்தில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்தாா்.

திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளா் தங்கம் தென்னரசுவை எதிா்த்து அதிமுக கூட்டனி கட்சி சாா்பில் மூவேந்தா் முன்னணி கழக வேட்பாளா் எஸ். ராஜசேகா் போட்டியிடுகிறாா். இவா் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் நினைவிடத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து தனது வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜை செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறும் போது, 2011 தோ்தலில் எங்களது கட்சி சாா்பில் திருச்சுழி தொகுதியில் பேட்டியிட்டு வெற்றியை தவறவிட்டோம். ஆனால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்றாா். அப்போது அக்கட்சியின் பொதுச் செயலா் எஸ்.ஆா். தேவா் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com