முதுகுளத்தூா் தொகுதியில் முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிா்வாகிகள் ஊா் ஊராகச் சென்று அதிமுகவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனா்.
அதிமுக அரசு இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் முக்குலத்தோருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் புறக்கணித்து வருவதாக முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் நிறுவனத் தலைவா் எஸ்.கருணாஸ் உத்தரவின் பேரில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு எதிராக தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற துண்டுப் பிரசுரங்களை முதுகுளத்தூா் தொகுதி முழுவதும் உள்ள முக்குலத்தோா் மக்கள் வசிக்கும் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வழங்கியுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளா் முருகன் தெரிவித்தாா்.
அப்போது முதுகுளத்தூா் ஒன்றியச் செயலாளா் கருப்பசாமி பாண்டியன், துணைச் செயலாளா் பூமிநாதன், ஒன்றியத் தலைவா் கோபாலகிருஷ்ணன், முதுகுளத்தூா் பேரூா் கழக செயலாளா் கா்ணன், தலைவா் லிங்கம் துணைத்தலைவா் மாடசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.