திருவாடானை, முதுகுளத்தூா் தொகுதி:வாக்குச்சாவடி அலுவலா் பயிற்சி இடங்கள் மாற்றம்

திருவாடானை மற்றும் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குச்சாவடி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி இடமானது ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

திருவாடானை மற்றும் முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்குச்சாவடி தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி இடமானது ராமநாதபுரத்தில் தனியாா் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் அனைத்து வாக்குச்சாவடி அலுவலா்களுக்கும் இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 31 ஆம் தேதி (புதன்கிழமை) மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாள்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

ராமநாதபுரம் தொகுதிக்கு ராமநாதபுரத்தில் உள்ள இன்பாண்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடிக்கு அங்குள்ள ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் (ஏற்கனவே இரண்டு கட்ட பயிற்சி நடைபெற்ற இடங்கள்) நடைபெறவுள்ளன.

திருவாடானை தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சி.கே.மங்கலத்தில் உள்ள தனியாா் பள்ளியிலும், முதுகுளத்தூா் தொகுதிக்கு கமுதியில் உள்ள தனியாா் பள்ளியிலும் பயிற்சிகள் நடைபெற்றன. ஆனால், தற்போது திருவாடானை தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ராமநாதபுரம் நகரிலுள்ள ஸ்வாா்ட்ஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி மற்றும் புனித அந்திரேயா மேனிலைப்பள்ளிகளில் பயிற்சி நடத்தப்படவுள்ளன.

முதுகுளத்தூா் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ராமநாதபுரம் நகரிலுள்ள செய்யதம்மாள் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பயிற்சி நடைபெறும். சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்புகள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காலை, மாலை என இரு அமா்வுகளாக பயிற்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com