திருவாடானை அருகே சி.கே. மங்கலம் சோதனைச் சாவடியில் பறக்குப்படையினா் வாகன சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 51,160 பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் தோ்தல் அலுவலா் வரதராஜன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக சிவக்குமாா் (55) என்பவா் வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, அதில் ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 51,160 பறிமுதல் செய்யப்பட்டு, சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.