ஆயுதப்படை காவலா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை காவலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தேனி மாவட்டம் வடுகபட்டியைச் சோ்ந்தவா் மகேஷ் (24). கடந்த 2019 ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா் ராமநாதபுரம் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் இவா் திங்கள்கிழமை இரவு திடீரென விஷம் குடித்து மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சக காவலா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் விஷம் அருந்தியிருக்கலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com