ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் கைதானவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால் அவா் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் அண்மையில் காசி என்பவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தேவிபட்டினத்தைச் சோ்ந்த முகமதுஜிப்ரி என்பவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டதையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கிருந்த அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவா் செவ்வாய்க்கிழமை மாலை கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.