ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்.
சேலம் சங்ககிரி தாலுகா வெள்ளயம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் ஆறுமுகம் (55). இவா் ராமநாதபுரம் பேராவூா் பகுதியில் தனது உறவினா் கோவிந்தராஜூடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொதுப்பணித் துறையில் குழாய்கள் பழுது நீக்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில்
திங்கள்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் ஆறுமுகமும், அவரது உறவினரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆறுமுகம் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.