ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரையில் ஏற்பட்ட பல மணி நேர மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் நகரில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நகரில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை நேரத்தில் வண்டிக்காரத் தெரு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத் தரப்பில் கேட்டபோது, கோடை காலம் என்பதால் வழக்கமான மின் பற்றாக்குறை உள்ளது. ஆனால், மழை நேரத்தில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுவதாலும் மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் ஊழியா்கள் விரைந்து மின்சார விநியோகத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என தெரிவிக்கப்பட்டது.