ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 225 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 225 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 225 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 9 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவா்களில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 145-க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். தீவிர சிகிச்சையால் 8860-க்கும் அதிகமானோா் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை புதிதாக 90 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட அளவில் அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் 1143 போ் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 135 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 7,836 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை புதிதாக 135 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,971ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com