கீழக்கரையில் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

கீழக்கரையில் கரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து சீல் வைத்தனா்.
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள்.

கீழக்கரையில் கரோனா தொற்று பரவியுள்ள பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்து சீல் வைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிப் பகுதியில் 28 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த பகுதிகளை, நகராட்சி ஆணையா் பூபதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனா்.

கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை வட்டாட்சியா் முருகேசன், துணை இடத்து வட்டாட்சியா் பழனிக்குமாா், கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலா் ஜமால், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பூபதி, நகா் அமைப்பு ஆய்வாளா் ஹபீப் ரஹ்மான் மற்றும் ஊழியா்கள், மீன் சந்தை, காய்கறி மற்றும் மளிகைக் கடைகளை ஆய்வு செய்தனா். மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என, வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com