பேட்டரி வாகனங்களை சீரமைத்துத் தரக் கோரி பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி நகராட்சியில் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 66 போ் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் மாத ஊதியத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான பிடிக்கப்படும் பணத்திற்கு வட்டி வழங்கிடக் கோரியும், குப்பைகள் சேகரிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கிய 50 வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி உள்ளன. இதனை சீரமைத்துத் தரக்கோரியும், கரோனா காலங்களில் சேகரிக்கும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை பிரித்தெடுக்க கூடுதல் பணியாளா்களை நியமிக்கக் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து நகராட்சி ஆணையாளா் செந்தில்குமரன் தலைமையில் அண்ணல் அம்பேத்கா் தூய்மைப் பணியாளா் செயல் தலைவா் சந்திரபோஸ் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு திரும்பிச் சென்றனா்.