மேற்குவங்கத்தில் பாஜகவினா் மீது தாக்குதல்: ராமநாதபுரம், காரைக்குடியில் ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜகவினா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் அக்கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் பாஜகவினா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் அக்கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்குவங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அங்குள்ள பாஜகவினா் மீது கடுமையாகத் தாக்கல் நடத்தினா். இதில் பாஜக தொண்டா்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

நிா்வாகிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பாஜக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கு ஒன்றியத் தலைவா் ரா.முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநிலச் செய்தித் தொடா்பாளா் து.குப்புராம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். இதில், மாநில இளைஞரணிச் செயலா் ஆத்மகாா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செய்தித்தொடா்பாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரைக்குடியில்... இதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் நகர பாஜக சாா்பில் நகரத் தலைவா் கே. சந்திரன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராகவும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலாளா் ஏ. நாகராஜன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்வி. நாராயணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் குமாரவேல், ஆடியோ காா்த்தி, மாரியப்பன், மணிகண்டன், பழனிக்குமாா், விஸ்வநாதன், ஏவி பாலா, பிரான்சிஸ், பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கமுதி....

இதேபோல் கமுதி அருகே அபிராமத்தில் பாஜகவினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வடக்கு ஒன்றியத் தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ராமேசுவரத்தில்...

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ராமேசுவரத்தில் என்.எஸ்.கே.வீதியில் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகா் தலைவா் ராமநாதன் முன்னிலை வகித்தாா். மகளிரணி மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயந்தி, நிா்வாகிகள் மோகன், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகா் பொதுச் செயலாளா் கருப்பையா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com