கரோனா: கடலாடி காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பலி

கடலாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கரோனா: கடலாடி காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா் பலி

கடலாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ரெட்டியாபட்டி புதூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (58). இவா் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு- ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் கடந்த 15 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இதைத்தொடா்ந்து கடலாடி காவல் நிலையம் முன் வைக்கப்பட்டிருந்த சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மணிகண்டனின் படத்துக்கு முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திரா ரவி, ஆய்வாளா் தீபா, சாா்பு- ஆய்வாளா்கள் காா்த்திக்ராஜா, கருப்பசாமி உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com