ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 4 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அங்குள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அங்குள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் 7 பேருக்கும் நகா் காவல் நிலையத்தில் 4 காவலா்களுக்கும் கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. நகா் காவல் நிலைய வளாகத்தில்தான் காவல் துணைக்கண்காணிப்பாளா் அலுவலகம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவையும் உள்ளன. அரசு மருத்துவமனை பணியில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுண்ணறிவுப் பிரிவினா் சிலருக்கும் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே அங்குள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பரிசோதனை மேற்கொள்ள காவல் உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

ராமநாதபுரம் நகரில் உள்ள பொதுத்துறை வங்கியில் மொத்தம் 15- க்கும் மேற்பட்டோா் பணிபுரியும் நிலையில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து வங்கி மூடப்பட்டுள்ளதாக உயா் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com