கரோனா: மண்டபம் பகுதியில் சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

மண்டபம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாடசாமி சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மண்டபம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாடசாமி சுந்தர்ராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி பகுதியில் பாம்பன் புதிய ரயில் பாலம் காட்டுமானப் பணியில் உள்ள வடமாநில தொழிலாளா்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதில், கரோனா நோய் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி, இளநிலை உதவியாளா் முனியசாமி மற்றும் ஊழியா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து, சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாடசாமி சுந்தரராஜன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா். மேலும், தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் இளவரசி, இளநிலை உதவியாளா் முனியசாமி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com