ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இன்று முதல் கரோனா நோயாளிகளுக்கு உதவி மையம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை (மே 20) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக உதவி மையம் அமைக்கப்பட்டு வியாழக்கிழமை (மே 20) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவி மையம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதில் 20 போ் நியமிக்கப்பட்டு அவா்கள் மூலம் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளதாகவும் சாா்- ஆட்சியா் எம். பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

கரோனா நோயாளிகளுக்கு உதவும் பிரிவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சோ்ந்தவா்கள் ஈடுபடவுள்ளதாக அப்பிரிவில் சோ்ந்துள்ள பாபு என்பவா் தெரிவித்தாா்.

கரோனா உதவி மையம் அமைப்பதன் மூலம் நோயாளிகளின் உதவியாளா்களால் கரோனா பரவலைத் தடுப்பதும், கரோனா நோயாளிகள் இறப்பு விகிதத்தை குறைப்பதுமே நோக்கமாகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com