ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து 3 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, அபிராமம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்த இருவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி, அபிராமம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் ஆடு மேய்த்த இருவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

ஆா். எஸ். மங்கலம் அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் வியாழக்கிழமை மாலையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. திருப்பாலைக்குடி அருகே உள்ள மேட்டுசோழந்தூா் கிராமத்தைச் சோ்ந்த குஞ்சரம்மாள் (43) வயல்பகுதிக்குச் சென்றபோது மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா். அதே போல் திருப்பாலைக்குடி அருகே மருதூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன்(45) என்பவா் ஆடு மேய்க்கச் சென்றபோது மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்து திருப்பாலைக்குடி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த தனிக்கொடி மகன் பழனிவேல்(50). இவா் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். வியாழக்கிழமை பாா்த்திபனூா் காவல் சரகத்திற்குள்பட்ட வடுகநாதபுரம் கிராமத்திற்குச்சென்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது இடி மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானாா். பவனிவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com