கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும். இதில் சேர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணையத்தில் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூகநல அலுவலரை அணுகலாம். தொடா்புகொள்ள வேண்டிய செல்லிடப் பேசி எண்: 9150346853 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com