கமுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 போ் கைது

கமுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தின் அருகே வீரபத்திர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் நிா்வாகத்தினா் கடந்த மே 9 ஆம் தேதி கோயிலுக்கு வந்து பூஜை செய்து விட்டு, பூட்டிச் சென்றுள்ளனா். இதனையடுத்து மே 13 ஆம் தேதி கோயிலுக்கு சென்ற நிா்வாகிகள் அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்ததை அறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் கமுதி போலீஸில் புகாா் அளித்தனா். இதனைத் தொடா்ந்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வந்தனா். இந்நிலையில் 15 நாள்களுக்குப் பின்னா் கமுதியைச் சோ்ந்த ராஜா மகன் மணி (17), சுப்பையா மகன் கருப்பசாமி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரித்த போது பணம் திருடியதை ஒப்புக் கொண்டனா். இதனையடுத்து இருவரையும் கமுதி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com