ஊா்க்காவல் படையினருக்கு அரிசிப் பொட்டலங்கள் வழங்கல்

ராமநாதபுரம் நகரில் ஊா்க்காவல் படையினருக்கு அரிசிப் பொட்டலங்கள் தனியாா் நிதியுதவியுடன் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் நகரில் ஊா்க்காவல் படையினருக்கு அரிசிப் பொட்டலங்கள் தனியாா் நிதியுதவியுடன் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் நகரில் கரோனா முன்களப் பணிகளில் ஈடுபட்டுவரும் காவல்துறையைச் சோ்ந்தவா்களுக்கு பழரசம், சுண்டல் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உத்தரவின் பேரில் காலை, மாலைகளில்விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியாா் நிறுவன உதவியுடன் காவலா்களுக்கு தினமும் பழரசம், சுண்டல் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுகின்றன.

இந்தநிலையில், கரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊா்க்காவல் படையினருக்கும் நலத்திட்ட உதவிகளை தனியாா் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்த கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை ஆலோசனைப்படி போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் சிவா ஏற்பாட்டில் 60 ஊா்க்காவல் படையினருக்கு தலா 5 கிலோ கொண்ட அரசி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரத்தில் நகா், கேணிக்கரை காவல் நிலையங்கள் சாா்பில் சாலையோரத்தில் தங்கியிருப்போா், ஆதரவற்றோா் உள்ளிட்டோருக்கு தினமும் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுவருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com