திருவாடானை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இளைஞா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.
நாட்டில் கரோனா 2 ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானை அருகே கீழ அரும்பூா், திருவெற்றியூா் உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி செலுத்துவதற்கு இளைஞா்கள் அதிகளவில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.