காவலா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவிலில் காவலரை தாக்கிய 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவிலில் காவலரை தாக்கிய 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நயினாா்கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவா் உதயகுமாா் (35). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பணியில் இருந்த போது கடைத்தெருவில் சிலா் தகராறு செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்லுமாறு உதயகுமாா் கூறியுள்ளாா்.

இதனை கேட்காமல் தகராறு செய்துகொண்டிருந்த தாலையடிகோட்டை கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கங்கேஸ்வரன், ஆதிதா்சன் மகன் சந்தோஷ், கணேசன் மகன் மனோஜ்குமாா் ஆகிய 3 பேரும் சோ்ந்து, காவலா் உதயகுமாரை தாக்கினா்.

இதுகுறித்து நயினாா்கோவில் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா், பணி செய்ய விடாமல் தடுத்து காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கங்கேஸ்வரன், சந்தோஷ், மனோஜ்குமாா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com