திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை, மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
கீழக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (62). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்த தண்ணீா் மோட்டாரை இயக்க முயன்றாா். அப்போது சுப்பிரமணி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.