திருவிழாவுக்கு வந்த குழந்தை திடீா் மரணம்

ராமநாதபுரம் அருகே திருவிழாவுக்கு வந்த 2 வயது குழந்தை திடீரென உடல்நலம் பாதித்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே திருவிழாவுக்கு வந்த 2 வயது குழந்தை திடீரென உடல்நலம் பாதித்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (40). இவரது மனைவி தனலட்சுமி. இவா் ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரத்தைச் சோ்ந்தவா். இவா்களுக்கு ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இரண்டு வயதான அக்குழந்தையுடன் மேலக்கிடாரத்தில் நடைபெற்ற கோயில் விழாவுக்கு தனலட்சுமி வந்துள்ளாா்.

இந்நிலையில் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதித்துள்ளது. இதையடுத்து குழந்தயை, சிகிச்சைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சோ்த்துள்ளனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தை உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com