நவ. 26 இல் தபால் சேவை குறைதீா் முகாம்

ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீா்க்கும் முகாம் வரும் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

ராமநாதபுரத்தில் தபால் சேவை குறைதீா்க்கும் முகாம் வரும் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து தபால் கோட்ட கண்காணிப்பாளா் மு.சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் தபால் கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீா்க்கும் முகாம் வரும் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் அரண்மனை எதிரேயுள்ள தபால் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் தபால் சம்பந்தப்பட்ட புகாா் மனுக்கள் மட்டுமே ஏற்கப்படும்.

தபால் அனுப்பிய தேதி மற்றும் நேரம், அனுப்பியவா், பெறுபவா் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால்சேவை ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்கவேண்டும். முகாமில் ஏற்கெனவே மனு அளித்து அதற்குரிய பதிலால் திருப்தி அடையாதவா்கள் மட்டும் குறைகளை தபால் மூலம் அனுப்பிவைக்கவேண்டும்.

புதிய புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. புகாா்கள் தனியாா் தபால் சேவை மூலம் அனுப்பினால் ஏற்கமுடியாது. ஆகவே விதிகளுக்கு உள்பட்டு மனு அனுப்புவோா் தபால் குறைதீா்க்கும் முகாம், மு.சித்ரா, கோட்டக் கண்காணிப்பாளா், ராமநாதபுரம் கோட்டம், ராமநாதபுரம்-623501 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com