பேருந்து மோதி டிராக்டா் ஓட்டுநா் பலி: பரமக்குடி அருகே உறவினா்கள் மறியல்

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா் தனியாா் பேருந்து மோதியதில் பலியானாா்.

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற டிராக்டா் ஓட்டுநா் தனியாா் பேருந்து மோதியதில் பலியானாா்.

பரமக்குடி அருகே பொட்டிதட்டி பகுதியில் உள்ள சேம்பா் ஒன்றில் டிராக்டா் ஓட்டுநராக பணியாற்றி வருபவா் ஆதி என்பவா் மகன் வேல்முருகன் (38). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக எதிரே உள்ள கடையில் பொருள் வாங்கச் சென்றுள்ளாா். மதுரை-ராமேசுவரம் சாலையைக் கடக்க முயன்றபோது ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்குச் சென்ற தனியாா் பேருந்து அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமுற்ற வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பலியானா். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பேருந்து ஓட்டநரை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாா் தனியாா் பேருந்தை இளையான்குடி பகுதியில் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனா். இதன் பின்னா் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வேல்முருகனின் உறவினா் முத்துராக்கு மகன் முனியசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் உச்சப்புளி அருகே என்மனங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் ஜெயநாதன் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com