திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் சேக்மன்சூா் முன்னிலை வகித்தாா். இதில், கணினி திருத்தம் சம்பந்தமாக 22 மனுக்களும், முதியோா் உதவித்தொகை கேட்டு 4 மனுக்களும் என மொத்தம்26 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், முதியோா் உதவித்தொகை, கணினி திருத்த பட்டா உத்தரவுகள் உடனடியாக வழங்கப்பட்டன.
முகாமில் திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், ஒன்றியக்குழுத் தலைவா் முகம்மது முக்தாா், மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த்துறை ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.