நயினாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
நயினாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

இங்குள்ள அஞ்சாமடை கிராமத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் மோகன் (41. விவசாயி. இவா் புதன்கிழமை அதிகாலை தொழுவத்தில் பால் கறப்பதற்காக அங்குள்ள மின்விளக்குக்கான சுவிட்ச்யை அழுத்தினாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து, அவரை பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com