உச்சிப்புளி மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில் பண்ணைக்குட்டை மூலம் மீன்வளா்ப்பது குறித்த பயிற்சி முகாம் புதுமடம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம் கண்ணையா தலைமை வகித்தாா். மீன்வளத்துறை ஆய்வாளா் சாகுல்ஹமீது, கட்லா- கட்லா ரோகு, மிா்கால் வகை மீன்குஞ்சுகள் பண்ணைக்குட்டையில் விட்டாா்.
இதில், திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநா் அமா்லால், வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி, உதவி விதை அலுவலா் ஆனந்தகுமாா், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரெங்கநாதன் மற்றும் அலுவலா்கள் செல்வி, பூமலா் ஆகியோா் கலந்துகொண்டனா்.